மீடியாவை சந்திக்கும் கமல்...! அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பும் இரண்டு நட்சத்திரங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னையில்  உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது அரசியல் என்ட்ரி குறித்தும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. 

மேலும், ''பெயருக்காக கட்சி ஆரம்பித்து தோல்வி அடைய விரும்பவில்லை. தேர்தல் களத்தில் நின்றால் வெற்றி பெற வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ''மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், நாளை (1.12.2020) பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் குரல் கொடுத்து வரும் கமல், நாளை பத்திரிக்கையாளர்களை சந்திப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 2021 தேர்தல் குறித்து இந்த சந்திப்பு இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தேர்தலுக்கான நேரம் நெருங்கி வரும் வேளையில், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமலின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள், தேர்தல் களத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!!!

 

தொடர்புடைய இணைப்புகள்

அரசியல் கலத்தில் ரஜினி - கமல் | rajinikanth and kamal hassan role in tamilnadu politics

People looking for online information on Kamal Haasan, Makkal Neethi Maiiam, Rajini Makkal Mandram, Rajinikanth will find this news story useful.