RAJA RANI 2: மருத்துவமனையில் மொத்த குடும்பமும் ஷாக்!.. "அப்ப நான் அவுட்டா..?" - நடிகரின் வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | “மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே” - கீர்த்தி சுரேஷ் அழகாய் பாடுன ஓணம் Song .. ஹார்ட்டின் விடும் fans.!

குடும்பத்துக்குள் நடக்கும் கதையான இந்த சீரியலில் ராஜா ராணி குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் தவறு செய்வதும் அவர்களை ஒவ்வொரு தருணங்களில் சந்தியா மற்றும் சரவணன் சேர்ந்து திருத்துவதும் இந்த கதையில் முக்கிய அம்சமாக வருகிறது.

அந்த வகையில் செந்தில் மற்றும் பார்வதி ஏற்கனவே திருந்தி விட்டார்கள். இதில் சரவணனின் கடைசி தம்பி ஆதி, தற்போது ஜெசி என்கிற பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆக்கியதை அடுத்து வீட்டில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பொய்கூறி வந்தார். கடைசியாக சரவணன் மற்றும் சந்தியாவின் முயற்சியால் ஆதி சொன்ன பொய் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதனை தொடர்ந்து ஜெசியை ஆதிக்கு திருமணம் செய்து வைக்க சந்தியா, தன் மாமியாரான சிவகாமியிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஆனால் சந்தியாவின் மாமியார் சிவகாமி ஜெசி, தன் மதத்தை கைவிட்டு வந்தால் ஆதிக்கும் அவளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம், மற்றபடி தவறு ஆதி மீது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனை தொடர்ந்து சிவகாமியின் மனதை மாற்றக்கூடிய படலம் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக தற்போது ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் கணவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அவருக்கு அரிதான ரத்த வகையான ஏ பி நெகடிவ் குரூப் ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்தம் ஜெசிக்கு இருப்பதாக கூறி சந்தியா ஜெசியை வரவழைக்கிறார். இந்த புரோமோ வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் சிவகாமியின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைவம் ரவி இது தொடர்பான ப்ரோமோவில் மருத்துவமனையில் தான் இருக்கும் புகைப்படத்தை போட்டு, “அப்ப நான் அவுட்டா?” என்று கேட்கிறார் . இது தொடர்பான அவருடைய இன்ஸ்டால் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே ஜெசி மருத்துவமனைக்கு வந்து அவருக்கு ரத்தம் கொடுக்கிறார். அதன் பிறகு ஜெசியை ஆதிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணும்போது உங்களுக்கு மதம் தடுத்தது; ஆனால் மாமாவுக்கு ஜெசி ரத்தம் கொடுக்க வந்தபோது உங்களுக்கு மதம் தடுக்கவில்லை என்று சந்தியா குத்தலும் குடைச்சலுமாக பாயிண்டுகளை பேசி சிவகாமியின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். இன்னும் சிலர், சந்தியாவின் மாமனார், ஜெசி விஷயத்தில் சிவகாமியின் மனதை மாற்ற இவ்வாறு நாடகம் ஆடுவதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண முடியும்.

Also Read | Video: சாண்டி மாஸ்டருடன் ‘தேனுஸ் குத்தாட்டம்’.. ஆடியன்ஸ்க்கும் ஒரு டாஸ்க் கொடுத்த அதிதி.!

தொடர்புடைய இணைப்புகள்

Raja rani 2 sesnational episode Saivam ravi self troll post

People looking for online information on Raja Rani 2, Tv Serial, Vijay Television will find this news story useful.