RAJA RANI 2: வெடிகுண்டுடன் ஓடிய சரவணனுக்கு என்ன ஆச்சு.?.. விறுவிறுப்பான ராஜா ராணி 2 …

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… VJS வெளியிட்ட மிரட்டலான டீசர்…

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசாவிற்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததால் அவருக்கு பதிலாக ரியா இப்போது சந்தியா வேடத்தில் நடித்து வருகிறார்.

போலீஸ் கனவு…

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக சொல்கிறாள். அதைக் கேட்ட சரவணன் எப்படியாவது சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்றும் இனிமேல் சந்தியா போலீஸ் ஆவது அவளின் கனவு மட்டும் இல்லை தன்னுடைய கனவும்தான் என்று அவளை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். ஆனால் சந்தியா குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலை வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடுகிறாள். பின்னர் நடக்கும் அதிரடி சம்பவங்களால் சந்தியா தனது கனவு நோக்கி நகர்ந்து, இப்போது போலீஸ் பயிற்சிக்கு படித்து வருகிறார்.

சரவணனின் நிலை…

இதற்கிடையில் முன்பகை காரணமாக செல்வத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் சந்தியாவும் சரவணனும் சமாளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது செல்வம் குழந்தையான சக்கரைக்கு கோட் சூட் அணிவித்து அதில் வெடிகுண்டை வைத்து விடுகிறான். அதை சந்தியா கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் பாம் வெடிக்க கொஞ்ச நேரமே இருக்கும் நிலையில் இனிமேல் செயலிழக்க வைக்க முடியாது எனும் நிலையில் சரவணன் யாருமில்லாத இடத்துக்கு வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். ஒரு பள்ளத்தில் அவர் இறங்க வெடிகுண்டு வெடித்து விடுகிறது. ஆனால் வெடிகுண்டோடு சென்ற சரவணன் என்ன ஆனார்… அதில் இருந்து தப்பித்து விட்டாரா என்று தெரியாத அதிர்ச்சியில் சந்தியா உள்ளிட்ட குடும்பத்தினர் அழுதுபுலம்புகின்றனர். இதனால் சரவணனுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள அடுத்தடுத்த எபிசோட்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read | “நேர்ல பாத்தாங்க கட்டிப்பிடிச்சாங்க… முடிஞ்சு போச்சு”… இளையராஜா & SPB நட்பு… சரண் நெகிழ்ச்சி

தொடர்புடைய இணைப்புகள்

Raja Rani 2 serial thrilling episode June 2022

People looking for online information on Raja rani 2 Serial, Raja Rani 2 Serial Episode, Vijay Television will find this news story useful.