பொய் வழக்கில் சரவணன் கைது… சந்தியா எடுத்த முடிவு – அடுத்த லெவலுக்கு செல்லும் ராஜா ராணி 2!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி சீரியலின் இந்த வாரத்துக்கான எபிசோட்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

Advertising
>
Advertising

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசாவிற்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நாயகி மாற்றம்….

இந்நிலையில் இப்போது ராஜா ராணி சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஆல்யா மானசாவிற்குப் பதிலாக ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வந்தார். அவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் தனது பிரசவத்துக்காக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்துக்கு ஆல்யாவுக்கு பதில் ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரியா நடித்துள்ள புதிய ப்ரோமோ காட்சியை விஜய் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது.


சந்தியாவின் கனவு…

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக சொல்கிறாள். அதைக் கேட்ட சரவணன் எப்படியாவது சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்றும் இனிமேல் சந்தியா போலீஸ் ஆவது அவளின் கனவு மட்டும் இல்லை தன்னுடைய கனவும்தான் என்று அவளை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். ஆனால் சந்தியா குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலை வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடுகிறாள்.

பொய் வழக்கில் சரவணன் கைது…

இந்நிலையில் சரவணன் தன்னுடைய கடையில் தடைவிதிக்கப்பட்ட போதைப் பொருட்களை விற்றதாக பொய் வழக்கு போடப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். காவல் நிலையத்தில் வைத்து சரவணனை போலீஸார் அடித்து துன்புறுத்த அதைப் பார்க்கும் சந்தியா மனமுடைந்து போகிறார். அப்போது சரவணன் சந்தியாவிடம் ‘உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் போலீஸ் வேல வேணாம்னு ஒதுங்கி போகிறீர்கள்.. அதனாலதான் பொறுக்கிங்க எல்லாம் போலீஸ் ஆகுறாங்க’ என சொல்கிறார். இதைக் கேட்ட சந்தியா போலீஸ் வேலைக்கு படிப்பதற்கான முடிவை எடுக்கிறாள். இதனால் ராஜா ராணி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Raja Rani 2 serial Sandhya decision after Saravanan arrested

People looking for online information on Raja Rani, Serial, Vijay tv will find this news story useful.