ஆப்பு வைக்க போன இடத்துல.. வாங்கிக் கட்டிக் கொண்ட அர்ச்சனா.. இந்த 'INSULT' நமக்கு தேவ தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'ராஜா ராணி' தொடருக்கு ஒட்டுமொத்த தமிழக குடும்பங்களும் பெரிய அளவில் ஆதரவினை அளித்திருந்தனர்.

Advertising
>
Advertising

புதிய படத்தில் தனுசுக்கு ஹீரோயினான வெளிநாட்டு நடிகை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

இந்த தொடரின் வெற்றி காரணமாக, தற்போது ராஜா ராணியின் இரண்டாம் பாகமும், 900 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் வரும் சந்தியா என்னும் முதன்மை கதாபாத்திரத்தில், நடிகை ஆல்யா மானசா நடித்து வந்தார். முதல் பாகத்திலும் அவரே நடித்து வந்த நிலையில், வேலை செய்யும் பெண்மணியாக வந்த இவரின் கதாபாத்திரம், பல குடும்பத்திலுள்ள ஒரு கதாபாத்திரமாகவே எளிதில் மக்களை சென்று சேர்ந்திருந்தது.

சந்தியாவாக ரியா

தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் ஆல்யா மானசா தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கணவர் சரவணனிடம் தன்னுடைய போலீஸ் கனவுகளை சந்தியா சொல்ல, மனைவியின் வெற்றிக்கு வேண்டி உடன் இருந்து உதவி செய்கிறார். அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த எபிசோடுகளாக சென்று கொண்டிருக்க, திடீரென இந்த தொடரில் இருந்து ஆல்யா மானசா விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக, நடிகை ரியா தற்போது சந்தியாவாக நடித்து வருகிறார்.

பவித்ராவுக்கு திருமணம்

ஆல்யாவை போலவே, ரியாவின் நடிப்பும், ராஜா ராணி 2 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் அர்ச்சனா, பல்பு வாங்கும் காட்சி ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அர்ச்சனாவின் தங்கையான ப்ரியாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, தவறுதலாக சரவணனின் தங்கை பார்வதியை பார்த்து விட்டு, பின் பார்வதியை திருமணம் செய்து கொள்ள அவர் விருப்பப்பட்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

தொடர்ந்து, பார்வதியின் படிப்பிற்கு பின்னர், திருமணம் நடத்தலாம் என்றும் இரு வீட்டார் முடிவு செய்கின்றனர். இதனையடுத்து, பார்வதியும் தற்போது படிப்பை முடித்து விட, இரு வீட்டாரும் திருமணம் நடத்துவதற்கான வேலைகளில் இறங்குகின்றனர். இதற்காக கோவிலில் சந்தித்துக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.

அர்ச்சனா பாத்த தில்லாலங்கடி வேலை

தங்கைக்கு நடக்க இருந்த திருமணம், பார்வதிக்கு மாறியதால் கடுப்பில் இருந்த அர்ச்சனா, நேரடியாக மாப்பிள்ளையின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் செல்கிறார். அங்கே மணமகனின் பெற்றோர்களிடம் பேசும் அர்ச்சனா, "உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்றதுக்கு தான் நான் வந்தேன். பார்வதிக்கு ஒரு வேலை கூட ஒழுங்கா செய்ய தெரியாது. உங்க நல்ல மனசுக்கும், உங்க குடும்ப பெருமைக்கும், கண்டிப்பா அவ சரியா வரமாட்டா. இப்ப நெனச்சா கூட, பார்வதியை வேணாம்ன்னு சொல்லிட்டு, என் தங்கச்சி பிரியா'வ கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என கூறுகிறார்.

இதனை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ளாத பையனின் தந்தை மற்றும் தாய் ஆகியோர், உடனடியாக அர்ச்சனா மற்றும் அவரது பெற்றோரை திட்ட ஆரம்பிக்கின்றனர். இதனால், அர்ச்சனாவின் முகம் மாறி போக, அவரின் பெற்றோரும் வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர்.

ராமாக Dulquer.. சீதாவாக மிருணாள்.. போருக்கு நடுவே பூத்த காதல் கதை! பட டைட்டிலுடன் வெளிவந்த போஸ்டர்

தொடர்புடைய இணைப்புகள்

Raja rani 2 archana insulted by parvathi fiancee family

People looking for online information on Raja Rani 2, Raja rani 2 Serial, Raja Rani 2 Serial Episode, Vijay Television will find this news story useful.