''இந்த குழந்தைங்க என்கிட்ட வரும்போது....'' - ராகவா லாரன்ஸ் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடன இயக்குநர், நடிகர் , இயக்குநர் என பன்முக திறமைகளுக்கு சொந்தக்காரர் ராகவா லாரன்ஸ். தற்போது சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி பட பார்ட் 2 படத்தில் நடிக்கவிருக்கும் செய்தி சமீபத்தில் வைரலாகியது.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அவர் சமூகத்தில் ஆதரவற்ற, நலிவடைந்த மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு நன்மதிப்பு உண்டு.

 

இந்நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், என் ஹெல்த் பிரச்சனை மற்றும் கஷ்டங்களால் என்னால் படிக்க முடியவில்லை. அதனால் நான் பல அவமானங்களை சந்தித்தேன்.

எனக்கு கல்வியின் அருமை தெரியும் என்பதால் நான் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்க முடிவு செய்தேன். இந்த இரண்டு குழந்தைகளும் என்னிடம் வரும் மிகவும் குழந்தைகளாக இருந்தனர். தற்போது அவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence shared emotional story about the children goes viral | ராகவா லாரன்ஸ் பகிர்ந்த எமோஷனல் சம்பவம் வைரல்

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.