பாய் ஃப்ரண்டுடன் சாட்டிங் செய்த இனியா.. ஃபோனை பிடுங்கிய ராதிகா..! கதிகலங்கிய கோபி.. BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் இந்த சீரியலில் அண்மையில் தான் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் ஆனது.

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | Bakasuran : “மோகன்.ஜி படம் சூப்பரா இருக்கு.! நான் இந்தியாவுக்கு வரேன்” - Excite ஆன மலேசிய ரசிகை.. வீடியோ

ஆனால் தந்தை கோபியுடன் போட்ட சண்டையால், கோபி தன் வீட்டை திரும்ப கேட்க, இதனால் பாக்யாவின் மீது பாக்யா மற்றும் எழில், அமிர்தா மீது மாமியார் ஈஸ்வரியும், மூத்த மகனும் செழியனும் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னதாக வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்தால் கோபியின் வீட்டை வாங்க பணம் கிடைக்கும் என்கிற ஈஸ்வரியின் கணக்கு உடைந்ததுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் பாக்கியா, அமிர்தாவின் உதவியுடன் செல்வி உள்ளிட்டோரின் துணையுடன் அடுத்தடுத்து இடைவிடாது தனக்கு வந்த கேட்டரிங் ஆர்டர்களை பெரும் எதிர்ப்பு, சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

Image Credit : vijay television

இதனிடையே வீட்டில் செழியனுக்கும் ஈஸ்வரி பாட்டிக்கும் டீ போட்டு கொடுத்த அமிர்தா ஈஸ்வரி பாட்டியால் அவமானப்படுத்தப் படுகிறார். ஆனாலும் செழியின் டீ குடித்துவிட, அமிர்தா பாஸ் ஆகிறார். இதேபோல் அமிர்தாவின் குழந்தை நிலாவை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் ஜெனி, அந்த குழந்தையை வைத்து செழியனை பெரியப்பா என அழைக்கச் சொல்வதும் வம்பிழுப்பதுமாக இருக்க, செழியனும் கொஞ்சம் கொஞ்சமாக கல் மனதை கரையவிடுவதாக தெரிகிறது.

Image Credit : vijay television

இதனிடையே கோபி மற்றும் ராதிகாவுடன் அவர்களின் வாடகை வீட்டில் இனியா தங்கியிருக்கிறார். அங்கு தன் தந்தை கோபியை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் குறிக்கோள். ஆனால் அங்கு இனியா படிப்பதாக சொல்லிவிட்டு தன்னுடைய டியூஷனுக்கு வந்திருக்கும் புதிய பாய் பிரண்டுடன் போனில் சாட் செய்து கொண்டிருக்கிறாள். இதனை பார்த்துக் கொண்டிருக்கும் ராதிகா படிக்காமல் எவ்வளவு நேரம் போனை பார்த்துக் கொண்டிருப்பாய் என்று போனை பிடுங்க, இருவருக்கும் சண்டை வெடிக்கிறது.

Image Credit : vijay television

இனியாவோ நீங்கள் ஒன்றும் என் அம்மா இல்லை.. ஏன் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்று கேட்க, ராதிகாவோ உன் அம்மா இருந்திருந்தால் இதைத்தான் கேட்பார். நீ இங்கு இருக்கும்வரை நான் உன் அம்மா ரோல் தான் எடுப்பேன், இதையெல்லாம் கோபி நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று கேட்க கோபியோ மகளா? மனைவியா? யார் பக்கம் நிற்பது என்று செய்வதறியாமல் தவிக்கிறார்.

Image Credit : vijay television

அதன் பிறகு ராதிகாவிடம் கோபி பக்குவமாக இருக்க சொல்ல, அதே சமயம் மகள் இனியாவுக்கும் புத்தி சொல்ல, தாத்தாவவோ உன் மனைவி ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், அவள் சரியாக தான் சொல்கிறாள், இதை எல்லாம் நீதான் முதலிலேயே இனியாவிடம் எடுத்துசொல்லி இருக்க வேண்டும் என்று கடுகடுக்கிறார்.

Also Read | "என்ன ஒரு வில்லத்தனம்".. பாக்யாவுக்கு கிடைக்கும் இப்படி ஒரு விசயத்தை தடுக்கும் ராதிகா..! Baakiyalakshmi

தொடர்புடைய இணைப்புகள்

Radhika Iniya new Conflict Baakiyalakshmi Episode Update

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial will find this news story useful.