செலவு பாக்குறது பாக்கியலட்சுமி.. தூபம் ராதிகாவுக்கா?? ‘கோபி’யை ட்ரோல் பண்ணும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிரபல சீரியலான 'பாக்கியலட்சுமி' எல்லா வாரத்திலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

"இனி யாருக்குமே இப்படி நடக்கக் கூடாது!".. நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. சூர்யா உருக்கம்

கடந்த வாரத்தில், தனது மனைவியை கோபி விவாகரத்து செய்ய முயன்றதும், அதற்காக கோர்ட்டுக்கு சென்ற காட்சிகளும், பெரிய அளவில் பரபரப்பை ஏற்றியிருந்தது.

இன்னொரு பக்கம், பாக்கியலட்சுமியின் மகன் சண்டை போடும் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கோபியின் துரிதம்

ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் முடிவை கோபி எடுத்துவிட்டார். ராதிகாவும் அந்த முடிவை உறுதி செய்து பாடாய் படுத்துகிறார். எனினும் ராதிகாவுக்கு தம்முடைய தோழியின் கணவர் தான் கோபி என்பது தெரியாது. மேலும், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்வதற்கான வழக்கையும் கோபி துரிதப்படுத்தி வருகிறார்.

பார்த்து பார்த்து பண்ணும் பாக்கியலட்சுமி

இதனிடையே, கோபியின் அப்பா, அதாவது தம்முடைய மாமனார் பக்கவாதம் வந்து முடங்கிக் கிடந்ததையடுத்து, அவருடைய மருத்துவச் செலவு, மொத்த குடும்பத்துக்கான செலவு, மளிகை செலவு, கரண்ட் பில் என அனைத்து செலவுகளையும் பார்த்து பார்த்து பண்ணிக் கொண்டிருக்கிறார் பாக்கியலட்சுமி.

மகன் சொல்லும் பொய்

மேற்கொண்டு, அந்த செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தன்னுடைய தேவைகளையும் சுருக்கிக் கொண்டு வாழும் பாக்கியலட்சுமி, தன் கணவர் கோபியிடம் கூட இடையில் காசு கேட்டு பார்த்தார். ஆனால் கோபியோ மனைவியை அவமானப்படுத்தி விட்டார். இதேபோல், தன் மகன் செழியன், தந்தைக்கோ தாய்க்கோ பணம் கொடுப்பதை வேறு யாருக்கு கொடுப்பது போல் யோசித்து கொடுப்பதாகவும், சில சமயங்களில் பணம் இல்லை என்று பொய் சொல்வதாகவும் பாக்கியலட்சுமி வேதனையில் உள்ளார்.

பணத்தட்டுப்பாடு

ஆனால், கோபி இப்படி தனது செலவை மாற்றிக் கொண்டதற்கான இன்னொரு முக்கியமான காரணம், தன் மனைவிக்கு துரோகம் செய்து விட்டு ராதிகாவின் பின்னால் சுற்றுவது தான். சில வேளைகளில் பணத்தை எடுத்து ராதிகாவிடம் கோபி கொடுத்துவிட, வீட்டில் பணத்தட்டுப்பாடும் உண்டாகிறது.

நீங்க ஏன் வருத்தப்படணும்?

இது தொடர்பாக வெளியான ப்ரோமோ ஒன்றில், "உன்னிடம் நான் எப்படி பணம் கேட்க முடியும்?" என கோபி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்லும் ராதிகா, "நான் கார் வாங்கும் போது, நீங்க மட்டும் 4 லட்ச ரூபாய் எடுத்து எனக்கு குடுக்கலயா?. நீங்க டென்க்ஷனா இருக்குறத பாக்கவே ஒரு மாதிரி இருக்கு. எதுக்கு ஒரு லட்ச ரூபாய்க்காக நீங்க இவ்ளோ வருத்தப்படணும்?" என சொல்கிறார்.

கலக்கத்தில் கோபி

"ரெண்டு நாளா இந்த பிரச்சனை என் மண்டைய காய வெச்சிட்டு இருக்கு. ஆனா, இத பத்தி என் வீட்ல யாருமே கேட்கல. மேல மேல செலவை என் தலைல கட்ட தான் பாக்குறாங்க. அதுல பாதியும் avoid பண்ண வேண்டிய செலவு தான். ஆனா, நீ பணத்தை எடுத்து குடுத்துட்டே" என கலக்கத்துடன் கோபி பேசுகிறார்.

தேற்றும் ராதிகா

பதிலுக்கு ராதிகாவும், கண்ணீரைத் துடைத்து கோபிக்கு ஆறுதல் சொல்கிறார். ஒரு பக்கம், பாக்கியலட்சுமி வீட்டு செலவைக் கட்டுப்படுத்தும் வழிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கோபி அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறார்.

அவரின் இந்த செயல் பற்றி, பாக்கியலட்சுமி தொடரின் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"இந்த பொண்ணையா அப்படி பாத்தோம்".. தாவணியில் Ex கண்ணம்மாவின்‘’ ரீல்ஸ்க்கு ஹார்ட்டு விடும் fans!

தொடர்புடைய இணைப்புகள்

Radhika convince gopi in baakiyalakshmi 9 th march 2022

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Gobi, Radhika, Vijay Television will find this news story useful.