PS1: பொன்னியின் செல்வன் பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு.. மனதார நன்றி சொன்ன நடிகை ராதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "விஜய் & உதய் கூட படம் பண்ண ஆசைப்பட்டேன்.. இன்னும் நடக்கல.." - சுந்தர்.சி ஆதங்கம்.!

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இது வரை தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து பொன்னியின் செல்வன் சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்தனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்தனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினர். பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க தங்களது முயற்சிகள் குறித்து கமல்ஹாசன் & ரஜினிகாந்த் இருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "பொன்னியின் செல்வன் படத்தினனல் தான் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து கமல்ஹாசன், அருள் மொழி வர்மனாகவும், விஜயகாந்த், ஆதித்த கரிகாலனாகவும், பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ், குந்தவையாக ஶ்ரீ தேவி, பூங்குழலி கதாபாத்திரத்தில் ராதா, நந்தினி கதாபாத்திரத்தில் ரேகா ஆகியோரை நடிக்க வைக்க நினைத்ததாக சூப்பர் ஸ்டார் பேசியிருந்தார்.

தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்து நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "அன்புள்ள ரஜினிகாந்த் சார், உண்மையிலேயே அற்புதமான இலக்கிய படைப்பின் அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருந்துவேன் என்ற உங்கள் எண்ணத்திற்கு நன்றி. இந்த வீடியோவை பார்க்க பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது."என ராதா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | "Fight சீன்ல, அதிக உதை வாங்குனது நிதி தான்”.. ”இனி தமிழ்ல நடிப்பாங்களா..".. உதய் கலகல பேச்சு😍

தொடர்புடைய இணைப்புகள்

Radha Nair Thanked Super Star Rajinikanth for PS1 Audio Launch Speech

People looking for online information on Ponniyin Selvan 1, Ponniyin Selvan Audio Launch, PS1, Radha Nair, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.