“ரச்சிதா ஏன் சிறு நீர்னு கேக்குறாங்க”.. அரண்மனை டாஸ்கால் குழம்பிய நடன மாஸ்டர்.. BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் மாஸ் BTS ஸ்டில்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்டுவிட்டதாக பணியாளர்கள் மீது ரச்சிதா கோபம் கொண்டு சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் இதுகுறித்த விசாரணையில் ராஜகுருவான விக்ரமன், ராணியான ரச்சிதா ஈடுபட்டனர். இதனிடையே கோபமாக கத்திவிட்டு பெட் ரூமுக்கு ரச்சிதா சென்று விட, அப்போது அங்கு ஓடி வந்து ராபர்ட் ரச்சிதாவிடம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார். ஆனால் உணவு சாப்பிட கூடியதாக இல்லை என்பதால் ராபர்ட் உணவு செய்தவர்கள் மீதும் கொதித்தார்.

அப்போது ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா குடிப்பதற்கு சிறு நீர் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். இந்த விஷயம் தற்போது பரபரப்பாகிவிட்டது. அடிப்படையில் கன்னட மொழி பேசக்கூடிய ரச்சிதா தூய தமிழில் இந்த நிகழ்ச்சியில் பேசுவதையே பலரும் பெரிய விஷயம் என்று பாராட்டி வருகின்றனர். எனவே சிறிதளவு நீர் வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்லும் பொழுது அவருக்கு அப்படி வந்திருக்கும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இது தொடர்பான ட்விட்டர் வீடியோவை பகிர்ந்த பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், “எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, நான் இதை பார்த்தேன். யாராவது எனக்கு இதை விளக்கிச் சொல்லுங்கள். அவர் ஏன் அவ்வாறு கேட்கிறார்? இங்கு என்னதான் நடக்குது? இந்த டாஸ்க் என்னவென சொல்லுங்கள்..? சிறுநீர் என்றால் யூரின் தானே? என்று கேட்கிறார். இவருக்கு பலரும் இது பற்றிய விளக்கத்தை கொடுத்து வருகின்றனர்.

அதாவது அரண்மனை டாஸ்க்கில் உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் கோபமான ராணியார் ரச்சிதா பெட்ரூமில் சென்று அமர்ந்து, ராபர்ட் மாஸ்டரிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்பதை சிறிதளவு நீர் என்று சொல்லாமல் சிறுநீர் என்று கூறிவிட்டார், என்று பலரும் சதீஷ் கிருஷ்ணனுக்கு விளக்கி இருக்கின்றனர். அத்துடன் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றும், அவருக்கு உடலில் சிக்கல்கள் இருக்கிறது என்றும் ஹவுஸ்மேட்களிடம் சீரியஸாக கடிந்தும் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | விபத்தில் நொறுங்கிய கார்.. ‘வேற லெவல்’ பிஎம்டபுள்யூ காரை வாங்கிய KGF நடிகர்.! வைரல் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha asks water viral raja rani task bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Rachitha, Raja Rani, Robert will find this news story useful.