உச்சகட்ட கோபம்.. பத்ரகாளியாக மாறிய ரச்சிதா?.. அரண்ட ஹவுஸ்மேட்ஸ்.. BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும். இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

கடந்த வாரம் சினிமா கதாபாத்திரங்களாக போட்டியாளர்கள் மாறி இருந்த நிலையில், சண்டைகள் குறைவாகவும் அதே வேளையில் சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் அதிகமாகவும் இருந்தது. ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக இந்த வார டாஸ்க் அமைந்திருந்தது. ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் சண்டை உருவாகி இருந்த நிலையில், சற்று பரபரப்பும் நிலவி இருந்தது.

இந்த நிலையில், ரச்சிதா கோபம் கொண்டது தொடர்பான விஷயம், தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமான நாள் முதல் போட்டியாளராக களமிறங்கி உள்ள ரச்சிதா, மிகவும் நிதானமாக அதே வேளையில் அனைவருடனும் பக்குவமாக தான் பேசி வருகிறார். பொதுவாக, அவர் கோபப்படுவது என்பது அரிதாக தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பார்க்கவும் முடிந்திருந்தது.

சமீபத்தில் கூட, கமல்ஹாசன் முன்னிலையில், சக போட்டியாளர்கள் அனைவரும் 60 நாளாகியும் ரச்சிதா தனது உண்மையான முகத்தை வெளியே காண்பிக்கவில்லை என தெரிவித்திருந்தனர். அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்த சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் டாஸ்க்கில் ரச்சிதா, நரகவாசிகள் அணியில் இருந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில், சிறை ஒன்றிற்குள் அவர் அடைபட்டிருக்க, தனலட்சுமி மற்றும் ஷிவின் உள்ளிட்டோர் அங்கே நிற்கின்றனர். இதனையடுத்து, ஆவேசமாக வெளியே வரும் ரச்சிதா, கால்களை கொண்டு வேகமாக சிறைக்கதவை உதைத்து எறிந்த படி வெளியேறி நடந்து செல்கிறார். மேலும் வெளியே வரும் போது, "எப்படி பூட்டுனீங்க?" என கோபத்துடன் பேசிக் கொண்டே ரச்சிதா கடந்து செல்வதும் தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha angry inside bigg boss house new task

People looking for online information on Bigg boss 6 tamil, Rachitha Mahalakshmi will find this news story useful.