சோஷியில் மீடியாவில் இருந்து வெளியேறிய ராஷி கண்ணா.. அவரே வெளியிட்ட பரபர அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷி கண்ணா ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Viruman: பிரபல OTT-யில் ரிலீஸாகும் கார்த்தி நடித்த "விருமன்" திரைப்படம் .. எப்போ? எதுல?

ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்

கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்திலும்,  தமிழில் 'திருச்சிறறம்பலம் ' படத்திலும், தெலுங்கில் 'பக்கா கமர்ஷியல்' படத்திலும் நடித்திருந்தார்.

ராஷி கண்ணா தற்போது  கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.  

சிலநாட்களுக்கு முன் "தென்னிந்திய படங்கள் பெண்ணுடலை புறநிலைப்படுத்துகின்றன" என ராஷி கண்ணா கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. இதையடுத்து  நடிகை ராஷிகண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், "தென்னிந்தியப் சினிமாவில் என்னைப் பற்றிய சில புனையப்பட்ட மற்றும் தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. யாராக இருந்தாலும் நான் கேட்டுக்கொள்கிறேன்..ப்ளீஸ் ஸ்டாப் செய்ய கோரிக்கை விடுக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு மொழி/படத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அன்பாக இருப்போம்". என கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஷி கண்ணா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,"எனது ட்விட்டர் கணக்கை செயலிழப்பு செய்து விட்டேன். இனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | VJ ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஃபோட்டோவுடன் KPY தீனா செம அப்டேட்..

Raashi Khanna Statement on Twitter Account Deactivation

People looking for online information on Rashi Khanna, Twitter Account will find this news story useful.