திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம் வழங்கிய பிரபல தமிழ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertising
>
Advertising

இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நடிகை ராஷிகண்ணா. இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார். 

கடைசியாக கடந்தாண்டு சன் டிவியில் நேரடி தொலைக்காட்சி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்திலும், கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்திலும், தமிழில், அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 3 ' படத்திலும் ராஸி கண்ணா நடித்தார்.

டெல்லியை பிறப்பிடமாக கொண்ட ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தி ஃபேமிலி மேன் புகழ், ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கத்தில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியுடன் ஃபார்ஸி என்ற வெப் தொடரிலும் ராஸி கன்னா நடித்து வருகிறார்.  

இந்நிலையில், தெலுங்கில் ராஷி கண்ணா, கோபிசந்த் உடன் இணைந்து நடித்துள்ள "பக்கா கமர்ஷியல்" படத்தின் ரிலீஸை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. 

 பக்கா கமர்ஷியல் படம் இந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நேற்று ரிலீஸ் ஆனது. நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Raashi Khanna served Anna prasadam to devotees in Tirumala

People looking for online information on Anna Prasadham, Balaji, Raashi Khanna, Thirumala, Thirupathi, Thirupati will find this news story useful.