நைசா தூங்குன குயின்சி.. உடனே கேட்ட நாய் சத்தம்.. எந்திச்சதும் ஒரு வார்த்தை சொன்னாங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.

Advertising
>
Advertising

Also Read | அதென்ன ‘போக பிஸ்ஸா’..? ட்ரெண்ட் ஆன ஏலியன்கள் Vs பழங்குடி Task.. இதான் ரூல்ஸ்? bigg boss 6 tamil

இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

பொம்மை டாஸ்க் தொடங்கி கடந்த வாரம் நடந்து முடிந்த நீதிமன்ற டாஸ்க் வரை போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்ட நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற நேரங்களில் ஒற்றுமையாக இருந்தால் கூட, டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் பஞ்சாயத்து தான். கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.

பொதுவாக, பிக்பாஸ் சீசன் ஆரம்பமானது முதலே, வீட்டிற்குள் பகல் நேரம் போட்டியாளர்கள் தூங்கினால், உடனடியாக நாய் குரைப்பது போல அதிக சத்தத்துடன் ஒலி ஒன்று வீட்டிற்குள் கேட்கும். எப்படிப்பட்ட ஒரு தூக்கத்தில் நாம் ஆழ்ந்திருந்தாலும், அந்த சத்தம் கேட்கும் போது தூக்கம் தொலைத்து கண்ணைத் திறந்து விடுவோம்.

இரவு நேரம் அல்லாமல் பகலில் போட்டியாளர்கள் தூங்காமல் இருப்பதற்காக தான் இந்த ஒரு நாய் குரைக்கும் ஆடியோ பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், ஏலியன் Vs பழங்குடி இன டாஸ்க்கிற்கு மத்தியில், குயின்சி தூங்க முயற்சித்த வேளையில் அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ஏலியன் அணியில் குயின்சி மற்றும் மணிகண்டா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் பகல் வேளையில் மெல்ல கண்களை அடைத்து தூங்கவும் தயாரானார்கள்.

போட்டியாளர்கள் தூங்கினால் நாய் குரைக்கும் ஒலி கேட்கப்படும் என்ற சூழலில், குயின்சி தூங்க முயன்றதை கண்டு அந்த சத்தமும் ஒலிக்கப்பட்டது. மறுகணமே, குயின்சி மற்றும் மணிகண்டா ஆகியோரும் கண் விழித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சுற்றும் முற்றும் பார்த்த குயின்சி, "யார்றா அது?" என கேட்கிறார். குயின்சி தூங்கியதற்காக தான் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது என்ற சூழலில், அதற்கு அவரே யார் என கேட்டது தொடர்பான ரியாக்ஷன், தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Also Read | ஒரே ஒரு வார்த்தையால் உருவான சர்ச்சை?.. முறையிட்டு மாற்றிய விக்ரமன்?. Applause அள்ளிய சம்பவம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Queency try to sleep dog bark sound her reaction

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dog bark, Queency, Vijay Television, Vijay tv will find this news story useful.