"வேலையே செய்யாம..".. தன்னைத் தானே சொல்லிக்கிட்ட குயின்சி!!.. HOUSEMATES ரியாக்ஷன் இதுதான்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கமல்ஹாசன்ங்குற பேர் அழியுதேனு கவலைப்பட மாட்டேன் ".. தான் ஏற்கும் கேரக்டர்கள் குறித்து கமல்.!

அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.

முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்  அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.

டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை அறிவித்திருந்தனர்.

புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்கிறார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நிறைய வழக்குகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சூழலில் போட்டியாளராக இருக்கும் குயின்சி, சக போட்டியாளர்களிடம் பேசியது தொடர்பான விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்திய எபிசோடுகளில் குயின்சி சற்று ஆக்டிவாக அவர் இல்லை என்ற விமர்சனமும் பரவலாக இருந்து வரும் நிலையில், சில விஷயங்களை குயின்சியே சக போட்டியாளர்களிடம் பேசியுள்ளார்.

அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, மணிகண்டா உள்ளிட்டோர் அமர்ந்திருக்க குயின்சி குண்டு வைத்ததாக அமுதவாணன் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசும் குயின்சி, தனது கையை மைனாவிடம் காட்டியபடி, "இங்க பாரு. என் கை எல்லாம் Tight ஆயிடுச்சு, வேலையே செய்யாம" என சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறார்.

மற்றவர்களும் "இப்ப தெரியுதா வேலை செய்யலங்குறது" என்றும் தெரிவிக்கின்றனர். இதே போல மற்றொரு சமயத்தில், மணிகண்டா, மைனா நந்தினி காலில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அவர்களிடம் பேசும் குயின்சி, "நான் போய் அட்லீஸ்ட் வேலை செய்யற மாதிரி பண்றேன்" என கூறிவிட்டு கிளம்பி செல்கிறார். இதனை கேட்டதும் ஒரு நிமிடம் திகைத்து போகும் மைனா, "வேலை செய்யுற மாதிரி பண்றியா?. குயின்சி நீ வேலை செய்யணும்" என்கிறார்.

தான் வேலை செய்யவில்லை என வெளிப்படையாக குயின்சி கூறும் விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "சம்மதமில்ல".. ஒண்ணா 'No' சொன்ன மைனா, ஷிவின்.. தனலட்சுமி பேசிய அதிரடி வசனம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Queency about her activity in bigg boss HM reactions

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Manikandan, Myna Nandhini, Queency, Vijay Television, Vijay tv will find this news story useful.