புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் நடந்த பிரச்சனை... சிசிடிவி காட்சிகள் வைத்து போலீஸ் விசாரணை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் நடந்த பிரச்சனையில், காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது. 

கிராமிய பாடகராக பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி. இதை தொடர்ந்து இவர் சினிமாவிலும் பாடியுள்ளார். இவரது மனைவியான அனிதா குப்புசாமியும் பாடகராவார். இவர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் விஹா என்ற ஆர்கானிக் சோப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இங்கு வேலை செய்து வந்த மைலாப்பூரைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய சிறுமிகள் காவல்துறையில் குப்புசாமி குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். சம்பளத்தை கேட்டதற்கு, தங்களை அடைத்து வைத்து, தாயை வர சொல்லி, அவர் காலில் விழுந்தால்தான் விடுவேன்'' என மிரட்டியதாக சிறுமிகள் தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து காவல்துறை அவர்களது நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிகள் கூறியது அணைத்தும் பொய் என தெரிய வந்துள்ளது. மேலும் புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்ததும், குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது. 

இது மட்டுமின்றி, சிறுமிகள் கொடுத்த ஆதார் கார்ட் விவரத்திலும், பிறந்த தேதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, இரு தரப்பும் சமரசமாக போக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். 

 

புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் நடந்த பிரச்சனை | pushpavanam kuppusamy house servant girls police complaint

People looking for online information on Anitha Kuppusamy, Pushpavanam Kuppusamy will find this news story useful.