மீண்டும் தியேட்டரில் ரிலீசாகும் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்... தேதி அறிவிப்பு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் எதிர்காலத்துக்கு உரியவை. ரிலீஸ் சமயத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட பல படங்களை இப்போது கொண்டாடுகின்றனர். அவரது முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கி இறுதியாக வெளியான NGK வரை பல படங்கள் அதே வகையறா தான்.

எந்த வகை சினிமா என்றாலும் 'ராஜா அங்க நான் தான்' என்பதைப் போல் படம் எடுப்பதில் அவர் கில்லி. எதையும் மறைத்து பேச தெரியாதவர்.காதல் காமம் என்று எல்லாம் இவரது படங்களில் வெளிப்படையாக முன்னிறுத்தப்படும். அதனாலோ என்னவோ சிலர் அவரது படங்களை முதலில் விமர்சிக்கின்றனர். ஆனால் காலங்கள் கடந்தும் அவரது படைப்புகள் நிற்கின்றன. குறிப்பாக அவரது காதல் படைப்புகளான காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி எல்லாம் 20 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்டாலும் இன்றும் தொடர்புப்படுத்த முடிகிறது. இனிமேலும் தொடர்புப்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் செல்வராகவன் என்றதுமே, பலரும் அடுத்து சொல்லும் வார்த்தை புதுப்பேட்டை. படமா அது Cult காவியம். இந்நிலையில் செல்வராகவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரு வேற லெவல் படங்களும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. நாளை டிசம்பர் 31ம் தேதி இரு படங்களும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மிஸ் செய்த ரசிகர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Pudhupettai and aayirathil oruvan re release date தியேட்டரில் ரிலீசாகும் புதுப்பேட்டை

People looking for online information on Selvaraghavan will find this news story useful.