மருமகளால புது பிரச்சனை ‌.. அத்தை சொன்ன ஷாக் விஷயம்‌‌.. ரண களமான பாக்கியலட்சுமி வீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்? .. G.V. பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் விஷயம்

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 360 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.

கோபியின் விவாகரத்து:

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்துள்ளார். பாக்கியலட்சுமியை ஏமாற்றி எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என குறுக்கு வழிகளை மேற்கொண்டார். இது சம்மந்தமான நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.

ஜென்னி கேட்ட பண உதவி:

இதேபோல குடும்பத்தில் வேறு சில பிரச்சனைகளும் இப்போது எழ ஆரம்பித்துள்ளன. குடும்பத்தில் மூத்தவரான மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே பணப் பிரச்சனை எழுகிறது. இதற்காக ஜென்னி தன் வீட்டில் பணம் கேட்க அந்த விஷயம் அவள் கணவனுக்கு தெரிந்துவிடுகிறது. இது சம்மந்தமாக அவர் ஜென்னியிடம் சண்டைபோட பதிலுக்கு ஜென்னியும் சண்டை போடுகிறாள். ஜென்னிக்கு ஆதரவாக அவரின் சகோதரர் வந்து பேச ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகிறது. இதையெல்லாம் பார்க்கும் கோபி கோபத்தில் அனைவரையும் விலகிச் செல்லுமாறு திட்டி அனுப்புகிறான்.

அத்தை மாமா எடுத்த அதிர்ச்சி முடிவு:

இதையெல்லாம் பார்க்கும் பாக்கியலட்சுமியின் மாமியார் தங்களால்தான் இந்த பிரச்சனை எல்லாம் வருகிறது என்று எண்ணி மறுபடியும் ஊருக்கே செல்லப் போவதாக பாக்கியலட்சுமியிடம் சொல்கிறார். இதைக் கேட்கும் அதிர்ச்சியாகி ’மாமா நல்லா இருக்கும்போது எவ்வளவோ இந்த குடும்பத்துக்காக செய்திருக்கிறார். இப்ப முடியாம இருக்கும்போது ஊருக்கு போகணுமா… ப்ளிஸ் அத்த என்ன விட்டு போயிடாதீங்க’ என அழுது உருகுகிறார். இந்த ப்ரமோவால் அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் அதிகமாகியுள்ளது. நாளை முதல் அடுத்த வாரத்துக்கான எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன. அத்தை மாமா பாக்யாவின் பேச்சைக் கேட்டு அங்கேயே இருப்பார்களா இல்லை ஊருக்கே கிளம்பிவிடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித் -ஐ இயக்கும் 'சூரரைப்போற்று' சுதா கொங்கரா? G.V. பிரகாஷ் குமார் கொடுத்த வேற லெவல் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Problems in family in bhagyalakshmi serial jenny

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Baakiyalakshmi Serial Jenny, Vijay tv will find this news story useful.