“அவன் எனக்காக நின்னதே கிடையாதுனு தெரிஞ்சும்..”.. CONFESSION ROOM-ல் கண்ணீர் விட்டழுத பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்ஷன் ப்ராசஸ்க்காக நாமினேட் செய்யப்படுவதற்கு போட்டியாளர்களை பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு ஒவ்வொருவராக வரச் சொன்னார்.

Advertising
>
Advertising

இதில் பிரியங்கா நாமினேட் செய்யும் போது அழுதிருக்கிறார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரியங்காவை விஜய் டிவி வாயிலாக மக்கள் நன்றாக அறிவார்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா, தான் எப்போதும் அன்புக்கு அடிமையானவர் என்றும் அதேசமயம் மற்றவர்களால் தன்னை மூளை சலவை செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டு வந்தார்.

எப்போதும் சிரிப்பு சகிதமாக இருக்கும் பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பின், கோபமாக இருந்ததையும் காணமுடிந்தது. அபிஷேக் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியபோது பிரியங்கா அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் அழுததையும் காணமுடிந்தது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கன்ஃபெஷன் அறையில் பேசிய பிரியங்கா 3 பேரை நாமினேட் செய்திருக்கிறார். முதலாவதாக அக்‌ஷராவை நாமினேட் செய்யும் போது அக்‌ஷராவுக்கு இந்த கேம் புரியவில்லை என்று சொன்னதை குறிப்பிட்டு பிரியங்கா நாமினேட் செய்தார்.

இதேபோல் தாமரையை நாமினேட் செய்த பிரியங்கா, அப்போது, “ஒரு தந்திரோபாயமாக தாமரை எதை வேண்டுமானாலும் செய்து இருக்கலாம், ஆனால் அதை என்னிடமே செய்தார். அதனால் நான் கொஞ்சம் காயப்பட்டேன்!” என்று குறிப்பிட்டு தாமரையை நாமினேட் செய்தார்.

இதனைத்தொடர்ந்து நிரூப்பை நாமினேட் செய்யும் பொழுது பிரியங்கா கண்ணில் தண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். பேசும் முன், பிக்பாஸிடம் ஒரு வினாடி அவகாசமும் கேட்டார்.

பின்னர் அழுதுகொண்டே நிரூப்பை நாமினேட் செய்த பிரியங்கா, “இது ஒரு கேம் ஷோ, நியாயமாக இருக்க வேண்டும். நான் எமோஷனல் தான். எல்லார் கிட்டயும் உட்கார்ந்து பேசுற ஒருத்தர் தன் நெருங்கிய தோழியுடன் பிரச்சனை என்றால் வந்து பேசலாம். என்னென்னவோ பேசுறான். இது ஒரு விஷயமே இல்லை. என்னிடம் வந்து பேசியிருக்கலாம்.

என்னவா இருந்தாலும் யாருக்கா இருந்தாலும் கேம் fair-ஆ இருக்கணும். அவன் இதை என்னிடம் செய்திருக்க வேண்டாம். அவனை நான் பயன்படுத்தியதாக சொன்னான். அதற்கு அவசியமே கிடையாது எனக்கு. அப்படியான உள்நோக்கமும் கிடையாது எனக்கு. அவன் எனக்காக என்னைக்குமே நின்னது கிடையாதுனு தெரிஞ்சும், அவனை நண்பனாகவே பார்த்தேன்.

அவனுக்காக நின்றேன். அவன் என்னிடம் உட்கார்ந்து பேசியிருக்கலாம், அதை செய்யாமல் அவன் வெடித்துவிட்டான். அவன் என்னிடம் பேசாமல் இருக்க என்னிடம் இருந்து விலகி இருப்பதாக சொல்கிறான். எங்க நட்பை நான் வெளியே சென்று பார்த்துக் கொள்கிறேன். ஆனால் இந்த கேமில் அவன் செட் ஆக மாட்டான். அவனை நாமினேட் செய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka cries in confession room nomination biggbosstamil5

People looking for online information on கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா, Biggboss priyanka niroop fight, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Confession Room, Priyanka cried, Priyanka cries, Priyanka emotional, Priyanka niroop fight, Priyanka niroop fight biggbosstamil5 will find this news story useful.