சீரியலிலும் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கும் ப்ரியா ராமன்!'.. முதல் சீனே மாஸ் தான்! ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஞ்சித் நாயகனாக நடித்து வரும் சீரியல் ‘செந்தூரப்பூவே’.

நடிகர் ரஞ்சித் பல வருடம் முன்பு நடிகை பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார். பிறகு பிரிந்து வாழ்ந்த இவர்களுள், நடிகை பிரியா ராமன், பிரபல சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' சீரியலில் நடித்து வருகிறார்.

அண்மையில் இந்த ஜோடி மீண்டும் இல்வாழ்க்கையில் இணைந்ததாக ரஞ்சித் மிகவும் மகிழ்ச்சியாக தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில்தான், ‘செந்தூரப்பூவே’ தொடரில், ரஞ்சித்தின் முதல் மனைவியின் குழந்தைகள் தங்களது அம்மாவை காட்டச்சொல்லி அடம் பிடித்தபோது, நடிகர் ரஞ்சித்தின் நிஜ வாழ்க்கை மனைவியான பிரியா ராமனின் ஓவியத்தையே கதையிலும் காண்பித்தார்கள்.

இதுவே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது இந்த சீரியலில் ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்குமான காதல் காட்சிகள் அரங்கேறியுள்ளன. ஆம், கதைப்படி ரஞ்சித்தின் கதாபாத்திரம் ‘துரை சிங்கம்’. துரை சிங்கத்தின் முதல் மனைவி அருணா மறைந்ததை அடுத்து அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் துரைசிங்கத்தின் முதல் மனைவியான  ‘அருணா’ கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடிக்கும் காட்சிகள் தற்போது இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக வெளியான புரோமோவில் அருணாவை கிண்டல் செய்யும் ஆண்களை துரைசிங்கம் வெளுக்கிறார். கோயிலில் நடக்கும் இந்த காட்சியில் தான் இருவரும் முதல் முறை பார்த்துக் கொள்கிறார்கள். இந்த புரோமோ வைரலாகி வருகிறது.

சீரியலிலும் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கும் ப்ரியா ராமன்!'.. முதல் சீனே மாஸ் தான்! ப்ரோமோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya raman entry as ranith wife senthoora poove viral promo

People looking for online information on PriyaRaman, Ranjith will find this news story useful.