ட்ரால் பண்றாங்க அதெல்லாம் எனக்கு புதுசு இல்ல....ஆனா அந்த கமெண்ட்..ப்ரியா வாரியரின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ப்ரியா வாரியர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம்  கணக்கிலிருந்து வெளியேறினார்.  ஒரு புருவ அசைவில் புகழ்ப்பெற்ற ப்ரியாவின் இச்செய்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் முடிவு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ப்ரியா எடுத்ததால், ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகையை ஆன்லைனில் காணாமல் தவித்தனர்.

Advertising
Advertising

ப்ரியா சோஷியல் மீடியாவிலிருந்து திடீரென்று விலகியதால் பலருக்கு யூகங்களும் கேள்விகளும் எழுந்தன. இப்போது, ​​ப்ரியா தனது இன்ஸ்டா கணக்கை மீண்டும் செயல்படுத்தியுள்ளார். ஏன் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறினார் என்ற காரணத்தையும் தற்போது வீடியோ செய்தியாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த லாக்டவுன் காலகட்டத்தின் போது, ​ அதிகளவு சோஷியல் மீடியாவில் இருந்ததால் தனக்கு சிறிய ப்ரேக் தேவைப்பட்டது என்றும் அதனால்தான் விலகியதாகவும் ப்ரியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் ஏன் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறினார் என்பதை சிலர் இஷ்டத்துக்கு கூறிய வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் யூகங்கள் தன்னை கலங்க வைத்துவிட்டது என்றார்.

விளம்பரத்திற்காகத்தான் ப்ரியா இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறினார் என்ற சிலரின் கருத்து அவர் மனதை காயப்படுத்தியது. நேர்மறையான யூதங்களை வரவேற்ற அதே சமயத்தில், இத்தகைய வெறுப்பாளர்களைப் பார்க்க பயமாக இருக்கிறது என்றார் ப்ரியா. 

உலகமே கொரோனா வைரஸ் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிலையில் போராடிக் கொண்டிருக்கும் போது, விளம்பரம் தேடுகிறார் என்று கூறும் இவர்கள் புத்தியில்லாதவர்கள்தான் என்று ப்ரியா லேசான புன்னகையுடன் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். ப்ரியா கூறியதை முழுவதும் கேட்க இந்த வீடியோவை பாருங்கள்

 

தொடர்புடைய இணைப்புகள்

Priya Prakash Varrier shares reason for deactivating instagram

People looking for online information on Covid 19, Lockdown, Priya Prakash Varrier will find this news story useful.