எஸ்ஜே சூர்யா படம் குறித்த தகவலுடன் ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன பிரியா பவானி சங்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து கடந்த மே மாதம் வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தில் பிரியா பவானிசங்கர் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனையடுத்து அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாஃபியா' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து 'மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு 'பொம்மை' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'பொம்மை' எனும் படத்தில் எனது பணிகளை நேற்றிரவு நிறைவு செய்து விட்டேன். இந்த இரவு திடீரென மிக அழகாக இருக்கிறது. என்னை நம்புங்கள் நீங்கள் காயப்படிருக்கிறீர்கள் என்றால், அந்த காயம் சீக்கிரமே மறைஞ்சி போய் நல்ல விஷயங்கள் மட்டுமே இனி வரும் நாட்களில் உங்களுக்கு நடக்கும். அனைவருக்கும் எனது அன்புகள்..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani SHankar Shares a details About Bommai Movie

People looking for online information on Bommai, Priya Bhavani Shankar, Sj suryah, Yuvan Shankar Raja will find this news story useful.