தான் நடித்த சீரியல் டைரக்டரின் மரணம்.! கலங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் & சினிமா இயக்குனர் தாய் செல்வம் மறைவுக்கு பிரியா பவானி சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "ஆயிஷா Friendship ஓகே, தனா உங்களுக்கு பிரச்சனையா?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - ராம்

கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3-ம் விதி’ படத்தை இயக்கியவர் தாய் செல்வம். இந்த படத்திற்கு முன் காத்து கருப்பு என்ற சீரியலை இயக்கி இருந்தார்.

பின்னர் பல சின்னத்திரை சீரியல்களையும் தாய் செல்வம் இயக்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான, காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், பொன்னூஞ்சல், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2  உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர்.

இச்சூழலில் தாய் செல்வம் நேற்று காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தாய் செல்வம் உடலுக்கு பல நடிகர்கள்  அஞ்சலி செலுத்தினர். நடிகை பிரியா பவானி சங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "KMKV யின் இயக்குனர் தாய்முத்து செல்வத்தின் மறைவு பல நினைவுகளை கொண்டு வருகிறது.அந்த மனிதர் தன் கோபத்திற்கு பெயர் பெற்றவர் ஆனால் என்னைப் பொறுத்தவரை பொறுமையாக இருப்பார். தவறை செய்ய விட்டு அதிலிருந்து கற்றுக் கொடுப்பவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுள் வெறுமையாக உணர்கிறேன். என்ன சொல்வது & எப்படி உணர்வது. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் சார்" என பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

தாய் செல்வம் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | Avatar 2 FDFS : ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படம்.. எப்படி இருக்கு..? ரசிகர்கள் சொல்வது என்ன? Avatar: The Way of Water

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Condolence Tweet for Thai Selvam Demise

People looking for online information on Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Condolence Tweet, Thai Selvam Demise will find this news story useful.