தானாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்து கொண்ட பிரபல ஹீரோ, ஆனால் ரிசல்ட்... ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு அதிக அளவில் டெஸ்ட் செய்யப்படுவதும் ஒரு காரணம் என்று சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

Advertising
Advertising

மேலும் வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து வருவோர் முறையான பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பிருத்வி ராஜ் 'ஆடுஜீவிதம்' படத்துக்காக ஜோர்டன் நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவைடந்த நிலையில் படக்குழுவினர் 50 பேருடன் கேரளா திரும்பினார். வெளிநாட்டில் இருந்து வந்ததன் காரணமாக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''தானாக முன்வந்து கொரோனா வைரஸ் டெஸ்ட் செய்து கொண்டேன். ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும் தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Prithviraj shares his Coronavirus test result | கொரோனா வைரஸ் ரிசல்டை பகிர்ந்த நடிகர் பிருத்விராஜ்

People looking for online information on Aadujeevitham, Coronavirus, Covid 19, Prithviraj will find this news story useful.