சிம்புவுக்கே TOUGH கொடுப்பார்… ANCHOR-ன் வஞ்சப்புகழ்ச்சி – பிரேம்ஜியின் செம்ம ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மன்மதலீலை படத்தின் விழாவில் மேடையில் பேசிய தொகுப்பாளர் பிரேம்ஜி அமரனை ஜாலியாகக் கலாய்த்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Cute ஸ்மைல் நயன்தாரா… Mass ஆக்ஷன் பிருத்விராஜ் – 'பிரேமம்' இயக்குநரின் Gold பட டீசர்!

பன்முகத் திறமையாளர் பிரேம்ஜி

தனது தந்தை கங்கை அமரன் போலவே இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் வலம் வருபவர் பிரேம்ஜி அமரன். தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார். அப்படி அவர் நடிக்க வாய்ப்புத் தரவில்லை என்றால் அந்த படத்துக்கு இசையமைப்பாளராகி விடுவார். 42 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்யாமல் செம ஜாலியாக, முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் காதலில் விழுந்துள்ளதாக செய்தி பரவ அதை மறுத்து ‘நான் எப்போதுமே மொரட்டு சிங்கிள்தான்’ என்று கூறியிருந்தார்.

சிம்பு பிரேம்ஜி நட்பு…

நடிகர் சிம்பு பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இசைத்துறையில் இருந்த பிரேம்ஜியை நடிகராக்கியதே சிம்புதான். தன்னுடைய வல்லவன் படத்தில் பிரேம்ஜியை நடிகராக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு சென்னை 28-ல் அவர் கவனிக்கப்பட்டு பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவ்வப்போது சிம்பு உடனான தன்னுடைய நட்பு குறித்து புகைப்படங்களோ அல்லது ஸ்டேட்டஸோ பகிர்ந்து வருவார். சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் கூட சிம்புவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.

மன்மதலீலை

வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள மன்மதலீலை படத்தில் நடிகராக இல்லாமல் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தில் அவருக்கு இசை ப்ளே பாய் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

Anchor-ன் ஜாலிப்பேச்சு…

இந்த நிகழ்ச்சியியில் பிரேம்ஜியை பேச அழைக்கும்போது தொகுப்பாளர் பிரேம்ஜி பற்றி கூறிய அறிமுகங்கள் மேடையில் இருந்தவர்களை சிரிக்கவைக்கும் விதமாக ஜாலியாக அமைந்தது. அவர் ‘இசைக்குடும்பத்தின் இளைய அரசர். இவரின் டிஷர்ட் வாசகம் மட்டும் எப்போதும் ஜாலியோ ஜிம்கானா. இவர் பாட ஆரம்பித்தால் பண்ணைபுரமும் பாட்டு படிக்கும். இவர் கையசைக்க ஆரம்பித்தால் ஒரு நாள் அந்த சிம்புவுக்கே டஃப் கொடுப்பார். இவர் ரூட் எப்போதும் தனி ரூட். இந்த பிரபஞ்சத்தில் விடை தெரியாத ஒரே கேள்வி ‘பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போது?’ இசை ப்ளேபாய், பெண்களின் பேரழகன் பிரேம்ஜி அவர்களை இப்போது பேச அழைக்கிறோம்.’ எனக் கூற மேடையில் இருந்த அனைவரும் பிரேம்ஜி உட்பட தொகுப்பாளரின் பேச்சை சிரித்து ரசித்தனர். பின்னர் பேசிய பிரேம்ஜி ‘செம்மயா இருந்துச்சு நன்றி’ என்று கூறி பேச ஆரம்பித்தார்.

ஜெண்டில்மேன் 2-ல் ஹீரோயினாகும் புது 'நயன்தாரா'.. ஃபோட்டோவை பகிர்ந்த K.T.குஞ்சுமோன்..

தொடர்புடைய இணைப்புகள்

Premgi amaren trolled by anchor in manmadha leelai function

People looking for online information on Anchor, Manmadha Leelai, Manmadha leelai function, Manmadha leelai Movie, Premgi, Premgi Amaren will find this news story useful.