பிரேமம் இயக்குனரின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த முன்னணி தமிழ் நடிகை? இவங்க தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல்களை தெரிவித்து இருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நயன்தாரா கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுதல் கலந்து கொண்டுள்ளார்.

அவர் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Premam alphonse puthren gold movie heroine update

People looking for online information on Alphonse Putharen, Gold, Nayanthara will find this news story useful.