சின்னத்திரை பிரபலத்தின் கிராமத்து வாழ்க்கை வைரல்.... சாணி தெளித்து வீட்டை மெழுகும் காட்சி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

Advertising
Advertising

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இந்த நாட்களை இருவரும் மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு நடந்த செயல்களை பகிரும் மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே  உருவாகியிருக்கிறது. அப்படியே அவர் கிராமத்து வீட்டில் சாணி தெளித்து மெழுகும் வீடியோவை  வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் "எந்த வேலையும் அவமானம் இல்லைனு பண்றீங்களே. வெரி குட்" என்று பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சின்னத்திரை பிரபலத்தின் கிராமத்து வாழ்க்கை வைரல் Popular Television actress village life goes viral

People looking for online information on Corona, Lockdown, Manimegalai will find this news story useful.