பிரபல மனம் கொத்தி பறவை நடிகைக்கு திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோக்கள் வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்தி பறவை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மியா. ஹோம்லியான நடிப்பின் மூலம் கவனம் பெற்றார். அதன்பிறகு 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தில் நடித்தார். பின்பு மலையாள சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். மலையாளத்தில் ஜோசப், மார்க்கோனி மதயி போன்ற படங்களில் நடித்துள்ள அவருக்கு அடுத்ததாக தமிழில் சமுத்திரகனி உடன் 'வெள்ளை யானை' என்ற படமும், மலையாளத்தில் இரு படங்களும் வரிசையில் இருக்கின்றன.

உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த காலத்தில், இந்தியாவில் கடந்த வருடம் 5 மாதங்களுக்கும் மேல் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்பொழுது கேரளாவில் உள்ள ஒரு கொரோனா தடுப்பு கால்செண்டரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்தார். அவரது இந்த செயல் மிகப்பெரிய பாராட்டை பெற்றது.

இந்நிலையில் நடிகை ஆத்மியா தற்போது  திருமணம் செய்து உள்ளார். கேரள முறைப்படி இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்த சானுப் என்பவரை அவர்  திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இத்திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் நடிக்க அவரது கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே ஆத்மியா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Athmiya

Popular tamil actress got married மனம் கொத்தி பறவை நடிகைக்கு திருமணம்

People looking for online information on Athmiya will find this news story useful.