"சாரி..கொரோனாவால யாரையும் கூப்பிட முடியல" - நடிகையை மணந்து 'போட்டோ' வெளியிட்ட பிரபல பாடகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே இப்போது கொரோனா பயத்தில் இருக்கிறது. இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொதுவாக கூடும் இடங்களுக்கு செல்லவே பயமாக இருக்கிறது. இப்படி மனிதனின் வாழ்க்கையில் ரவுண்டு கட்டி ஆடுகிறது கொரோனா.

சினிமா துறையின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் யாரையும் அழைக்க முடியாமல் திருமணம் செய்துள்ளார் பிரபல மலையால பாடகரான அபிஜித் கொல்லம். திரைப்படங்களில் பாடி வருவதுடன் பக்திப் பாடல்களும் பாடி வருகிறார் அபிஜித். இவரது குரல் 'யேசுதாஸ்' போல் இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

இவருக்கும் நடிகை விஸ்மயாஸ்ரீக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இருக்கும் சூழலில் பலரையும் அழைத்து திருமணம் செய்ய முடியாத சூழளுக்கு அவர்ஆளாகினர். எனவே அவர்களுக்கு மிக சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. இருவரின் குடும்பத்தினர் மட்டும் திருமணத்தில் பங்கெடுத்து கொண்டனர்.

அந்தப் புகைப்படங்களை வெளியிட்ட அபிஜித் "இந்த சூழலில் யாரையும் அழைக்க முடியவில்லை இந்த கொரோனா பிரச்சனையெல்லாம் முடியட்டும் மிக பெரிய அளவில் வரவேற்பு நிகச்சி வைத்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா காரணமாக யாரையும் அழைக்காமல் நடிகையை திருமணம் செய்த பிரபல பாடகர் Popular Singers Makes A Secret Marriage With Actress Du

People looking for online information on Abijith Kollam, Corona, Malayalam, Marriage will find this news story useful.