முடிவடைய போகும் பிரபல விஜய் டிவி சீரியல்... உறுதிசெய்த ஹீரோவின் பதிவு... சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்ஜீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும். தற்போது சமூக வலைதளங்களில் சூப்பர் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர், அடிக்கடி தங்கள் மகளுடன் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது. இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே சஞ்ஜீவ் ஆல்யா தம்பதிக்கு என்று தனியே ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம்.

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து வெற்றி பெற்ற வெகு சில நடிகர்களில் சஞ்ஜீவும் ஒருவர். இவர் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, 13-ம் நம்பர் வீடு போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், சீரியலில் நுழைந்த பிறகு ராஜா ராணி சீரியல் வேற லெவல் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் 'காற்றின் மொழி' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவடைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "ஆம் காற்றின் மொழி சீரியல் நிறைவடைய போகிறது. உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக நன்றி. நான் எங்கேயும் சென்றுவிடவில்லை. சீக்கிரமே எனது அடுத்த ப்ராஜக்ட் பற்றி அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular serial in vijay tv is it going to end?முடிவடைய போகும் விஜய் டிவி சீரியல்

People looking for online information on Alya Manasa, Sanjeev will find this news story useful.