பிரபல சின்னத்திரை நடிகைக்கு CORONA...குடும்பத்தினருக்கும் பாதிப்பு... கண்ணீர் விட்டழுத நடிகை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோயினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் வியாதியினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertising
Advertising

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்துள்ளார். கொரோனா வியாதியினால் மருத்துவமனையில் இருக்கும் அவர் கூறும்போது "உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். உடலில் அந்த வைரஸை வைத்திருப்பது அத்தனை லேசான காரியமாக இல்லை. இதற்கு எந்த சரியான மருத்துவமும் இல்லை. உங்கள் உடலை நீங்கள் வலுவாக வைத்திருப்பதைத் தவிர. இந்தியர்களுக்கு தங்கள் உணவினால் அது சாத்தியப் பட்டுள்ளது. என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் அழ ஆரம்பித்துவிட்டார். மேலும் கூறிய அவர் "நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம் எங்களுக்காக வேண்டுதல் செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகைக்கு கொரோனா கண்ணீர் பதிவு Popular serial actress and family test corona positive

People looking for online information on Corona, Covid19, Mohena Singh will find this news story useful.