செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி பதிவு... "சீரியலில் இருந்து ஆதியை மாத்தனும்..ஏன்னா"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் அந்த சீரியலில் வில்லியான பரதா நாயுடு சில மாதங்களுக்கு முன்பு அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் செம்பருத்தி சீரியலில் நிறைய அரசியல் நடப்பதாக கண்ணீரோடு வீடியோவில் கூறினார். இந்நிலையில் சமீபத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி  சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை பற்றி அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் பல உண்மைகளை கூறியுள்ளார்.

அவர் கூறும் பொழுது "பரதா நாயுடு சொன்ன அளவிற்கு இங்கு அரசியல் இல்லை. சீக்கிரமே சீரியல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த சீரியலில் ஒருவரை மாற்ற வேண்டுமென்றால். நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க பெரிதாக ஆர்வமில்லை என்று நினைக்கிறேன். அவர் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அவர் ஆசைப்பட்டபடி சினிமாவுக்குச் சென்று, வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் இன்னும் நலமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி பதிவு... "சீரியலில் இருந்து ஆதியை மாத்தனும்..ஏன்னா" வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular sembaruthi actress shares her experience in serialசெம்பருத்தி சீரியலில் நீக்கப்பட்ட நடிகை

People looking for online information on Janani, Sembaruthi will find this news story useful.