பிரபல நடிகை தற்கொலை.. ஃபேஸ்புக்கில் முன்னரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!! என்ன நடந்தது.??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''I quit. Goodbye to this world and depression'' என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை டெலிட் செய்தார். 

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் ஃபேஸ்புக் லைவ்-ல் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிரபல நடிகை தற்கொலை.. ஃபேஸ்புக்கில் முன்னரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!! என்ன நடந்தது.?? வீடியோ

பிரபல நடிகை தற்கொலை | Popular kannada actress and biggboss contestant jayashree ramaiah commits suicide

People looking for online information on Jayashree Ramaiah will find this news story useful.