சுஷாந்துடன் கடைசியாக பேசிய ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்த பிரபல ஹீரோ - ''இப்படி ஒரு முடிவை...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதத்தில் சுஷாந்துடன் கடைசியாக பேசிய ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நீண்ட பதிவை எழுதியுள்ளார். அதில், ''18 மாதங்களுக்கு முன்னால் 'கேதார்நாத்' பட ரிலீஸின் போது சுஷாந்த் தனது அம்மாவை பற்றி பதிவு ஒன்றை எழுதியிருந்தார். இதுகுறித்து அவரிடம் கடைசியாக பேசியிருந்தேன். 

அவரது படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் போது அதனை காண அவரது அம்மா இல்லை என்று அவர் வருத்தப்பட்டிருக்கலாம். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது. எந்த விஷயம் அவரை இப்படி ஒரு முடிவை எடுக்கச் செய்தது என்னால் சொல்ல முடியாது.

அவரது அம்மா இல்லாத வெற்றிடம் பற்றிய அவரது வருத்தத்தை என்னால் உணர முடிந்தது குறித்து என்னால் தெரிவிக்க முடியும். நீங்கள் சிறப்பான , மகிழ்ச்சியான இடத்தில் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மேலும் உங்கள் அமைதியை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular hero shares screenshot of his last conversation with Sushant Singh ft Arjun Kapoor | சுஷாந்த் சிங்குடன் கடைசியாக பேசிய ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந�

People looking for online information on Arjun Kapoor, Sushant Singh Rajput will find this news story useful.