விஜய் டிவியில் புதிய சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக இரண்டாம் பாகமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "நாம் இருவர் நமக்கு இருவர்". இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சீரியலின்  முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ராஷ்மி. இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்த சீரியலின் இரண்டு நடிகைகளும் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை கொரோனா  காலத்தில் தனது வீட்டில் ஷூட்டிங்கிற்கு அனுமதிக்கவில்லை என்று ராஷ்மியே பிறகு கூறியிருந்தார். இந்நிலையில் நாம் இருவர் நமக்கிருவார் சீரியல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார் ராஸ்மி. ஆம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் பிரம்மாண்டமாக கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் ரிச்சு என்ற மணமகனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை ராஷ்மி விஜய் டிவி சீரியலில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் ராஜபார்வை என்ற சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியல் புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ராஷ்மி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

விஜய் டிவியில் புதிய சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Rashmi

Popular actress to act in new vijay tv serial ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

People looking for online information on Rashmi will find this news story useful.