அதிர்ச்சி மரணம்!.. பிரபல "மண்வாசனை" தொடரில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி 1978 ஆம் ஆண்டில் கிஸ்ஸா குர்சி கா படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தை அடுத்து தமாஸ் (1988), மம்மோ (1995) மற்றும் பாதாய் ஹோ (2018) உள்ளிட்ட 3 படங்களில் நடித்ததற்காக 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.

இதேபோல் 2008-லிருந்து 2016 வரை இந்தியில் ஒளிபரப்பான  ‘பாலிகா வது’ என்கிற தொடர் மூலம் பிரபலமானவர். அந்தத் தொடர் தான் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்து ஒளிபரப்பானது.

இந்நிலையில், நடிகை சுரேகா சிக்ரி மும்பையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 75. இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: கார்த்தியின் ‘சர்தார்’.. ‘அப்போ செம்ம ஆக்‌ஷன் பிளாக் இருக்கு!’.. வந்தாச்சு ‘மாஸ்’ அப்டேட்!

தொடர்புடைய செய்திகள்

Popular actress Surekha Sikri passed away fans condolence

People looking for online information on Surekha Sikri will find this news story useful.