உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் சிலர் வெளிநாடுகளிலும், வெளி ஊர்களிலும் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஹிந்தி நடிகையான சாந்தினி பகவானி தற்போது ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ளார்.
