''அந்த சீக்ரெட் உன் கூடவே போய்டுச்சு'' - சுஷாந்த் சிங் மரணம் குறித்து பிரபல நடிகை வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.  யாரும் எதிர்பாராத நிலையில் நிகழ்ந்த அவரது மரணம் பிரபலங்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை பூமிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ''நீ எங்கே இருந்தாலும், கடவுளின் கையில் தான் இருப்பாய். நீ சென்று சரியாக ஒரு வாரம் ஆகிறது. உன்னை எது எடுத்துச் சென்றதோ? அந்த சீக்ரெட் உன்னுடனே சென்று விட்டது. ஏன் உனக்கு இப்படி நடந்தது என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மறைந்த ஒரு உயிரிற்கு மரியாதை கொடுங்கள். மனிதர்களை மதிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்காகவும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். மனிதர்களை குறை சொல்லாதீர்கள். ஒவ்வொருவரையும் மதியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular Actress shares emotional note about Sushant Singh Rajput's death ft Bhumika | சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து பிரபல நடிகை வேதனை பதிவு

People looking for online information on Sushant Singh Rajput will find this news story useful.