இளம் நடிகை மீது காவல்துறை வழக்குப்பதிவு.. ' மசூதிக்குள் ஷூட்டிங் நடத்தியதுதான் காரணமா..?!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சபா கமார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் ஹிந்தியில் மறைந்த நடிகர் இர்ஃபான் கானுடன் 'ஹிந்தி மீடியம்'' என்கிற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை சபா கமார் மற்றும் பாடகர் பிலால் சயீத் மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  அண்மையில் சபா கமார் நடித்த பாடல் வீடியோ ஒன்றில், ஒரு சிறிய காட்சி மசூதிக்குள் படமாக்கப்பட்டு இருந்தது, சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. இதையடுத்து மசூதியின் புனிதத்தை கலங்கப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அந்த பாடலில் சர்ச்சையான குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளதாம்.

பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு | Popular actress booked under blasphemy law in pakistan

People looking for online information on Bilal Saeed, Saba Qamar will find this news story useful.