கொரோனாவால் நெகிழ்ச்சி ... விவாகரத்துக்கு பிறகு ஒரே வீட்டில் இணைந்த, நடிகரின் குடும்பம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து இருக்கின்றனர். இந்திய அரசாங்கம் 21 நாள், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே வேலை செய்பவர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்த நிலைமை இந்தியாவுக்கு மிகவும் புதிது. இதுவரை நாம் சந்தித்திராத இந்த சூழ்நிலையில் பல அதிசயங்களும் சேர்ந்தே நடந்து வருகிறது.

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி உதவி செய்து கொள்கிறார்கள். மீண்டும் மனிதாபிமானம் எட்டிப் பார்க்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் இந்தி சூப்பர்ஸ்டார் நடிகர் ஹிரித்திக் ரோஷன் குடும்பத்திலும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஹிரித்திக் மற்றும் அவரது மனைவி சுஸான் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா காரணமாக 21 நாட்கள் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்துள்ளனர்.

இது பற்றி கூறிய நடிகர் ஹிரித்திக் "நாடே ஊரடங்கில் இருக்கும் போது, பிள்ளைகளின் பெற்றோர் பிரிந்திருப்பது நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். இதோ இந்த புகைப்படத்தில் இருப்பவர் சுஸான் எனது கடந்தகால மனைவி, இம்மாதிரி கடினமான சூழ்நிலையில், அவரே பிள்ளைகளுக்காக எனது வீட்டில் வந்து தங்கியிருக்கிறார். எங்கள் பிள்ளைகள் தனியாக இருப்பதை நாங்கள் இருவருமே விரும்ப வில்லை." என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் இணைந்த பிரபல நடிகரின் குடும்பம் Popular Actor Wife Rejoins With The family After Corona Lockdown

People looking for online information on Corona, Hrithik Roshan, Sussanne Khan will find this news story useful.