கொரோனாவுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர் - பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஒருபக்கம், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஒரு பக்கம் என மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.  மேலும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நிகழும் பிரபலங்களின் மறைவு மக்களை மிகவும் பாதித்துள்ளது.

அந்த வகையில் இன்று மேலும் ஒரு துக்க செய்தி கிடைத்துள்ளது. நடிகரும் கலைஞர் டிவியின் முன்னாள் ஜெனரல் மேனேஜராகவும் இருந்த ஃபிளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று (14/09/2020) மரணமடைந்தார்.

நடிகர் ஃபிளோரன்ட் பெரேரோ 'தொடரி', 'தரமணி', 'சத்ரியன்', 'கொடி வீரன்', 'வேலையில்லா பட்டதாரி 2' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் என்னால் நம்ப முடியவில்லை. நடிகரும், கலைஞர் டிவியின் முன்னாள் ஜெனரல் மேனேஜரும் நல்ல மனம் கொண்டவருமான ஃபிளோரன்ட் பெரேரா மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor Passes away due to covid -19 ft Florent Pereira | கொரோனா வைரஸிற்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

People looking for online information on Corona Virus, Covid-19, Florent Perera will find this news story useful.