கத்தி சண்டை போட்ட அர்ச்சனா, நிஷா... கலாய்த்த பிரபல நடிகர்... "அவங்க எப்போ வெளிய வருவாங்க"..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பாதிப்பேர் ரோபோவாகவும் மீதி பேர் மனிதர்களாகவும் இருக்கின்றனர். மனிதர்கள் ரோபோக்களை சிரிக்க அல்லது அழ  வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் போட்டி எல்லை மீறி போக "என் அப்பாவின் இறப்பு விளையாட்டு அல்ல".... கூச்சலிட்டு கதறி அழுத அர்ச்சனா மற்ற போட்டியாளர்களிடம் கோபமாக சண்டை போடுகிறார்.

நேற்றைய தினம் அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. முதல்முறையாக அர்ச்சனா நிஷாவைப் பார்த்து கோபமாக கத்தியதையும் பார்க்க முடிந்தது. அவரது தந்தையை பற்றி நிஷா கேட்ட கேள்விகள் பொருத்தமற்று இருந்தது என்று ரசிகர்களும் கூட கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த டாஸ்கின் பொழுது அர்ச்சனை மற்றும் நிஷா எமோஷனலாக பேசிக்கொண்டதை ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அந்த வகையில்  பிரபல நடிகரும் நடன அமைப்பாளருமான சதீஷ் இது பற்றி கருத்து கூறியுள்ளார். அவர் கூறும்போது "நிஷா அர்ச்சனாவை அப்படி எமோஷனலாக உடைக்க வேண்டுமென்று பேசியிருந்தாலும், அர்ச்சனா அப்பொழுதே இதுபற்றி உரக்கப் பேசி இருக்க வேண்டுமானால். அப்பொழுது அது ஒரு கேம் என்று புரிந்து கொண்டு, பின்பு ஏன் கத்த வேண்டும்? எனக்கு இது புரியவில்லை. நிஷா மற்றும் அர்ச்சனா என்ன பண்ணுகிறார்கள்? டாஸ்க் தானே இது? அன்பு குரூப்பின் தொல்லை தாங்க முடியவில்லை. நிஷா சாரிப்பா.. டாஸ்க் ப்பா இது... அர்ச்சனா எப்போது வெளியே வருவாங்க" என்று கூறியுள்ளார்.

Popular actor makes fun of nisha and archana கலாய்த்த பிரபல நடிகர்

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.