ஆரியை கிண்டல் செய்த ரம்யா... அதிரடியாக கேள்வி எழுப்பிய பிரபல நடிகர்... "ரம்யா அடிக்கடி ஏன்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அர்ச்சனா மற்றும் ஆஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வைரலானது. இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். காரணம் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறி விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் போட்டியில் சுவாரசியத்தை கூட்ட அர்ச்சனா தொடர்வார் என்று பலரும் அக்கருத்து தெரிவித்தனர்.

ஆனால் அதிரடியாக அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இதுபற்றி நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் "அய்யோ அன்பு அன்பு அன்பு முடியல. கமல் சார் ப்ளீஸ். இத்தனை நாட்களாக பிக்பாஸில் மற்ற 3 பேரையும் அவர் தான் கெடுத்து வைத்துள்ளார்." என்று கூறியுள்ளார்.

அதேபோல் சனிக்கிழமை ஆரி காப்பாற்றப்பட்ட பிறகு அர்ச்சனா, ரம்யா மற்றும் பாலாவிடம் சென்று கடவுள் இருக்கானா  குமாரு? என்பதுபோல் மறைமுகமாக கிண்டல் செய்து கொண்டிருந்தார். அது பற்றி பேசிய சதிஷ் "ரம்யா கொஞ்சம் புரியுற மாதிரி பேசுங்க. கடவுள் இருக்கான் குமாரு என்று ரம்யாவும் அர்ச்சனாவும் ஏன் சொல்லுகிறீர்கள்? ஆரி காப்பாற்றபட்டதாலா? அதேபோல் ஏன் அடிக்கடி ரம்யா பாலாவிடம் பூரணி பேசுகிறார். ஏன் பொதுமேடையில் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதாலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular actor makes fun of archana and ramya ஆரியை கிண்டல் செய்த ரம்யா

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.