பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா. இவர் விஜய் டிவியின் பிரபல விஜேவான பாவனாவின் நெருங்கிய தோழி என்பது பலரும் அறியாத விஷயம்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். எனவே தோழியான சம்யுக்தாவிற்கு பாவனா ஓட்டு கேட்டு ஒரு பதிவை தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டார். ஆனால் அதற்கு சிலர் மோசமான கமெண்டுகளை பதிவிட்டனர். அதற்கு அவர் "நம் அனைவருக்கும் தெரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரின் ஒரு பக்கத்தை தான் காட்டுவார்கள். ஆனால் எனக்கு சம்யுக்தாவை பல வருடங்களாக தெரியும். அவருக்கு மிகவும் நல்ல மனது. இந்த போட்டியில் அவர் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் மக்களுக்கும் அவரைப் பற்றி தெரிய வேண்டும். வெறுப்பு வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
