பொன்னியின் செல்வன் 'நந்தினி' ஐஸ்வர்யா ராயுடன் வானதி.. வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Chess Olympiad: பிரபல நட்சத்திர விடுதியில் பாராட்டு விழா..ஒரே மேடையில் CM ஸ்டாலின் - கமல் - உதயநிதி!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நீங்கள் எடுத்த சமீபத்திய புகைப்படத்தை பகிர ஒரு ரசிகர் கேட்டுக்கொண்டார். ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஷோபிதா துலிபாலா ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வானதி கதாபாத்திரம், கொடும்பாளூர் இளவரசி ஆவார். குந்தவை நாச்சியாரின் தோழியும், அருள் மொழி வர்மனின் காதலியாகவும் வருபவர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற Stunt Masters!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Sobhita Dhulipala with Aishwarya Rai Bachchan Photo

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Bachchan, Ponniyin Selvan part 1, Sobhita Dhulipala will find this news story useful.