"TOXIC மதனின் ஆபாச சேனலுக்கு அட்மினே அவரது மனைவிதானா?".. விசாரணையில் வெளியான 'அதிர்ச்சி' உண்மைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூபில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆன்லைன் விபிஎன் இணைய சேவை மூலம், ஆபாச வார்த்தைகளுடன் நேரலை செய்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் மதன் தேடப்பட்டு வரும் நிலையில், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் பல அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளதாக தெரிகிறது.

'டாக்சிக் மதன் 18+' என்கிற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் பேசிவந்த மதன், அவர் மீது எழுந்த புகார்களை தன் வழக்கறிஞரை வைத்து எதிர்கொள்வதாகவும், இதற்காகவெல்லாம் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனை சென்னை நகரக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்தபோதும் அவர் வராத நிலையில், சேலத்திலிருந்த அவரது தந்தை, மனைவி விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போதுதான் மதனின் சேனல் நிர்வாகியாக இருந்ததே அவரது மனைவி தான் என்பதும் அத்துடன் மதன் ஆபாசமாக பேசும்போது எதிர் தரப்பில் பேசிய பெண்ணின் குரலே கிருத்திகா தான் என்பதும் காவல் துறைக்கு தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மதன் தமது யூடியூப் சேனலில் தொடர்ந்து இயங்கும் விதம் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.  குறிப்பாக அந்த சேனலில் பெண்களை இழிவாக பேசும் வார்த்தைகள், தம்முடன் விளையாடும் பெண்களை ஆபாசமாக பேசும் வார்த்தைகள் இடம்பெற்று வந்ததால் இதுபற்றி சென்னை நகரக் காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் மதன் விசாரணைக்கு ஒத்துழைக்க ஆஜராகாமல் இருந்தார்.

அத்துடன் இந்த யூடியூப் சேனல் மூலம் மாதாமாதம் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்துள்ளதாம்.  இந்த வருமானத்தை அடுத்து மதன் வாங்கிய  2 சொகுசு கார்களையும் இப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்வார்கள் என தெரிகிறது.

ALSO READ: Ex மனைவி மீது கள்ளக்காதல் குற்றம் சாட்டிய ராஜ் குந்த்ரா!".. கூலாக யோகா பண்ணும் ஷில்பா ஷெட்டியின் வைரல் வீடியோ..

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Police investigates to Toxic Madhan wife and family

People looking for online information on Madhan, Toxic Madhan, Youtuber Madhan will find this news story useful.