நடிகை சித்ராவின் மரணத்தில் சந்தேகம்.. கணவரிடம் போலீஸ் விசாரணை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் மறைவு தொடர்பாக அவரது கணவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து இவர் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார். மேலும் அண்மையில் இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட வேளையில், ஜனவரியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

இந்நிலையில் தற்போது நடிகை சித்ரா , ஹோட்டல் ரூம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், பல்வேறு பிரபலங்கள் உருக்கமான இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது கணவரான ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

சித்ராவின் கணவரிடம் போலீஸ் விசாரணை | Police enquires actress chithra's husband hemnath in her suicide

People looking for online information on Chithra, Chithra Suicide, Chithu VJ, Pandian Stores Chithra will find this news story useful.