நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்... காரணம் என்ன..? - முழு விவரம் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை விஜயலக்‌ஷ்மி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. 

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலக்‌ஷ்மி. இதை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். ஃப்ரென்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை கிளப்பினார். 

இந்நிலையில் தற்போது விஜயலக்‌ஷ்மி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜயலக்‌ஷ்மி ஒரு தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளார். இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் வாய் மொழியாக புகார் கொடுத்துள்ளார். 

இதை தொடர்ந்து, நடிகை விஜயலக்‌ஷ்மி அந்த விடுதியின் உரிமையாளருக்கு, கொடுக்க வேண்டிய மீதி தொகையை கண்டிப்பாக தருவதாக உறுதியளித்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜயலக்‌ஷ்மி மீது போலீஸில் புகார் | police complaint given against actress vijayalakshmi

People looking for online information on Vijayalakshmi will find this news story useful.