கமலை ஒருமையில் பேசியதன் காரணமாக சரவணன் வெளியேற்றப்பட்டாரா ? - விஜய் பட இயக்குநர் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் சேரன் - மீரா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய போது கமல்ஹாசன் அதனை ஆற்றுப்படுத்தும் விதமாக பேருந்தில் செல்லும் போது இதெல்லாம் சகஜம் ஒரு சிலர் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்வதுண்டு என்று பேசினார்.

அதற்கு சேரனுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு சரவணனும் நானும் அப்படிலா பண்ணிருக்கேன் சார் என்பது போல தெரிவித்தார். இது சமூக ஊடகங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளே சரவணன் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை (ஆகஸ்ட் 5) சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் குறித்தும் பிக்பாஸில் இன்னபிற விஷயங்கள் குறித்தும் இயக்குநர் பேரரசு Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது தொகுப்பாளர் நிக்கி, பிக்பாஸில் கடந்த ஞாயிறன்று கமல் சாரை அவன் கோர்த்து விடுறான் என்று ஒருமையில் பேசினார். அதன் காரணமாகத் தான் அவர் வெளியேற்றப்பட்டாரா ? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பேரரசு, கமல்ஹாசன் பெரிய லெஜண்ட் அவர அப்படி பேசுவாரானு டவுட். சேரனும் பெரிய இயக்குநராக இருந்தாலும், அவர் ஹீரோவாக நடித்த படத்தில் சேரன் உதவி இயக்குநராக இருந்துள்ளார். அதன் காரணமாக அவர் பேசியிருக்கலாம். ஆனால் கமல் அப்படி இல்ல. மேலும் அவர் கமலைத்தான் அப்படி பேசினாரா என்பது தெரியாது.

ஏனெனில் அது கொஞ்சம் லாங்கா இருந்தது. அது அங்க வொர்க் பன்றவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அவர் உண்மையாக பேசியிருக்கும் பட்சத்தில் அதன் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்க கூடும். பேருந்தில் இடிச்சேன் என்பது பெரிய காரணமில்லை. அப்படி இருந்தா உடனே அவரை எலிமினேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

Perarasu speaks about Saravanan Losliya Kavin Kamal Haasan Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Perarasu will find this news story useful.