முட்டை உடைக்கும் TASK-ல் ராஜூவுடன் எழுந்த மோதல்! அழுதுகொண்டே WALK OUT செய்த பாவனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 84 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தங்களை இறுதிப்போட்டிக்காக தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

டிக்கெட் டூ ஃபினாலே

அதன் பொருட்டு முன்னதாக டிக்கெட் டூ ஃபினாலே என்று சொல்லக் கூடிய ரவுண்ட்டை பிக்பாஸ் அறுவுறுத்தினார். ஃபினாலேவுக்கு போகும் வரை நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் ஒரு கோல்டன் டிக்கெட்டான இந்த டிக்கெட்டை பெறுவதற்காக போட்டியாளர்களுக்கு தினம் தினம் புது புது டாஸ்க்குகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இறுதிப் போட்டிகள் எப்போதுமே கடுமையாக இருக்கும் என்பதை கடந்த சீசன்களில் கண்டிருப்போம். அதேபோல் தான் இந்த பிக்பாஸ் 5வது சீசனிலும் போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்காக விளையாடுவதற்கு தயாராகினர். அதன்படி நிரூப் ஃபினாலே டிக்கெட்டுக்கான முதல் ரவுண்டில் டிக்கெட்டை பெற்றதால், மற்றவர்களுக்கு மட்டும் இந்த டாஸ்க் நடந்தது.

Also Read: "நம் விவசாயிகள் போல, நெசவாளர்களும் டெல்லிக்கு போய் உக்காரணுமா?" .. வரி உயர்வுக்கு கமல் கண்டனம்!

முட்டை உடைத்தல்/காப்பாற்றிக் கொள்ளுதல்

இதில் போட்டியாளர்களின் கூட்டில் உள்ள முட்டையை, உடைக்கவரும் எதிர்போட்டியாளர்களிடம் இருந்து தடுத்து, காப்பாற்றிக்கொள்ள வேண்டும், எதிர் போட்டியாளர்களின் முட்டைகளை உடைக்கலாம். இந்த போட்டி நிமித்தமாக சிலருக்குள் தள்ளுமுள்ளு  ஏற்பட்டது. குறிப்பாக தாமரைக்கும் பிரியங்காவுக்குமான தள்ளுமுள்ளு தாக்குதல் அளவுக்கு போய்விட்டது.

இதில் பாவனியின் கூட்டில் இருந்த முட்டைகளை முன்னதாக ராஜூ உடைக்க, பின்னர் தன் முட்டைகளை உடைக்க வந்த பாவனியை ராஜூ தடுத்தார். அப்போது, பாவனி, “பிசிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்கிறீர்கள். நான் கிட்ட வரும் முன்பே தடுக்கிறீர்கள். இது சரியில்லை” என புகார் கூறினார். இதனால் ராஜூ பாவனியை தடுத்தும், கையைப்பிடித்து முறுக்கியும் தன் முட்டைகளை காப்பாற்றிக்கொண்டிருந்தார்.

வாக் அவுட் செய்த பாவனி

பிறகு பாவனியை இறுக்கமாக பிடித்துக்கொண்டே, ராஜூ, பாவனியின் முட்டைகளை உடைத்தார். அப்போது இரக்கப்பட்ட தாமரை பாவனிக்காக சில முட்டைகளை சேகரித்து அவரது கூட்டில் வைத்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அழத் தொடங்கிய பாவனி, மீதம் இருந்த தன் முட்டைகளை தாமரை, பிரியங்கா என ஆளுக்கு ரெண்டாக கொடுத்துவிட்டு  walk out செய்தார்.

2வது ஃபினாலே டிக்கெட்டை இழந்த பாவனி, தமாரை

அதன் பின்னர் நிரூப், பாவனியை சமாதானம் செய்து, அழைத்துவந்து ஆடச் சொன்னார். எனினும் இறுதிவரை, ராஜூவும் பாவனியும் தள்ளு முள்ளு செய்து ஆடினர். இந்த டாஸ்க்கின் இறுதியில் பாவனி மற்றும் தாமரை இருவரின் கூடையிலும் இருந்த அனைத்து முட்டைகளும் உடைக்கப்பட்டுவிட்டதால் இருவரும் இந்த டிக்கெட் to ஃபினாலேவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Also Read: “நான் விஜய் சாரை வைத்து”...  ‘ஆச்சார்யா’ இயக்குநர் ரவி மரணம்! ‘ஷாஜகான்’ இயக்குநர் ரவி இரங்கல்! பரவும் அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Pavani physical struggle with raju biggboss finale task

People looking for online information on Biggboss finale, BiggBoss5, BiggBossTamil5, Pavani raju, Raju pavani, Vijay tv will find this news story useful.